வெள்ளி, டிசம்பர் 31, 2010

அழகே சுகமா..




ணுக்கும் பெண்ணுக்கும் இயல்பிலேயே ஒரு (அழகிய) முரண் இருப்பதாக தோன்றுகிறது. பெண் ஆணிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதாக ஆண் கருதுகிறான். பெண் தன்  விருப்பபடி ஆணை சம்மதிக்க செய்யும் சாமர்த்தியம் அவனுக்கு இல்லாததால் ஒருவேளை அப்படி தோன்றலாம். அதனால் அவன் தன் விருப்பங்களின் நியாயங்களை பெண்ணுக்கு புரிய வைக்க இயலாமல், பிரச்சினையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லுகிறான். அது பொய் என தெரிய வரும் போது பெண் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள். அவன் மேல் கோபம் கொள்கிறாள். இங்கே பிரச்சினை பொய் சொன்னதா, அல்லது புரிந்து கொள்ள விரும்பாத பிடிவாதத்தில் பெண் இருப்பதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனாலும் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ வேண்டிய வாய்ப்பு இருவருக்குமான, சகித்து கொள்ளும் மன நிலையால் சாத்தியமாகி தான் இருக்கிறது.

(பார்த்தாலே பரவசம் படத்தின் அழகே சுகமா... பாடல் கேட்ட போது தோன்றியது.)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

என்னை காணவில்லை!!!



ந்த நாளேட்டில் வெளியிட முடியும்?

என்னை காணவில்லை - என்ற விளம்பரத்தை!.



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், டிசம்பர் 30, 2010

என்ன தராங்க?



ரசு மருத்துவமனையில் காத்திருக்கும் போது சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க சிறுவனுடன்...

நான்: உம் பேரு என்ன?

அவன்: சதீசு..

நான்: எத்தனாவது படிக்கிற?

சதீசு: அஞ்சாது.

நான்: எங்க படிக்கிற?

சதீசு: பள்ளிகோடத்துல.

நான்: என்ன சொல்லி தராங்க?

சதீசு: முட்ட, சோறு எல்லாம் தராங்க...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...