புதன், ஜனவரி 26, 2011

அல்வா மட்டுமல்ல...



இன்னும் பனிப் போர்வை 
விலக்காத சோம்பல் பூமி,

சுட்டெரிக்காமல் செல்லமாய் 
எட்டிப் பார்க்கும் சூரியன்,

கைக்கு எட்டும் தூரத்தில் 
RIN வெண்மை (:p) கொக்கு,

மனைப்பிரிவுகளாகி 
மலடாக்கப் படாத 
பசுமை படர்ந்த நிலம்,

கரையோடு கதை பேசும் 
தண்ணீர் ஓடும் நதி!!!

செல்போன் இல்லாத மனிதர்கள்,

தாவணிப் பெண்கள்,

நெல்லையில் வாழ்க்கை இன்னும் 
இனித்துக் கொண்டு தான் இருக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், ஜனவரி 20, 2011

அமைதி காக்கவும்!



டலூர் 
வள்ளலார் சன்னதியில் 
அறிவிப்பு பலகை.
"அமைதி காக்கவும்".
"பக்கும்! பக்கும்!" என 
ஆமோதித்துக் கொண்டே இருந்தன 
புறாக்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஜனவரி 14, 2011

போகி...


காலை பல் துலக்கும் ப்ரஷிலிருந்து,
இரவு படுத்துறங்கும் பாய் வரை
அனைத்தும் பிளாஸ்டிக் ஆனதால்,
போகி நெருப்பில் எரிந்தது...
சுற்றி அமர்ந்த மனிதர்களின்
ஆரோக்கியம்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், ஜனவரி 11, 2011

பேருந்து பயணம்...



குத்த வைத்து காத்திருந்து, 
வரும் ஒவ்வொரு பேருந்துக்கும் எழுந்திருந்து,
"ஏம்பா இந்த பஸ்சு எங்க போகுது?" என கேட்கும் 
பாம்பட பாட்டிகளை இப்போது காணவில்லை.

முதியவர்கள் வந்தால் எழுந்து இடம் தரும் 
இளைஞர்களும் குறைந்து போனார்கள்.

அச்சடித்த டிக்கட்டுக்கு பதில், டிக்கட் 
அச்சடிக்கும் எந்திரம் நடத்துனரின் கைகளில்.

"வாழப்பாடில விறகு கடை முருகேசன் தெரியுமா?" 
"எங்க மாமா தாங்க அவரு!" 
புதிய அறிமுகங்களுக்கும், வாழ்கையின் 
சுவாரசியங்களுக்கும் வழி விடாமல் 
பேருந்துகளில் தொலைகாட்சிபெட்டி.

பேருந்து பயணத்தில் இன்னும் மாறாமல் இருப்பது, 
பேசிக் கொண்டே இருக்கும் பேருந்தின் ஜன்னல்களும், 
அரசாங்கம் பராமரிக்கும் (!) குழி விழுந்த சாலைகளும் தான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஜனவரி 07, 2011

அன்புமயமாதல்...




குழந்தையுடன்
கோயிலுக்குச் சென்றேன்

பூக்காரப் பெண்
கூடுதல் ரோஜா கொடுத்தாள்


பிள்ளையாரை வணங்கிய பெரியவர்
பிள்ளையின் கன்னம் கிள்ளிப்போனார்


கற்பூர ஆரத்தி ஒற்றி
குங்குமம் இட்டுவிட்டார் குருக்கள்


பிறிதொருவர் பிரசாதம் அளித்து
புன்னகைத்தார்


அவ்வேளையில்
அம்மனின் மார்பிலும் சுரந்திருக்கலாம்
பிள்ளைக்கான பால்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்


நன்றி - ஆனந்த விகடன் / 12 ஜன 2011 இதழ்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், ஜனவரி 06, 2011

முரண்...

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற 
தேவ ஆட்டுக் குட்டி ஏசு. - யோவான் 1.29

கைவனுக்கும் அருளி செய்ததால்
கடவுளானார் கர்த்தர்.
அவரால் பாதுகாக்கப்பட்ட
தவறேதும் செய்யாத ஆடு
பக்தனின் பந்தியில்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...