அன்பு என்றாலே அம்மா தான். மனிதரில் மட்டுமல்ல, எல்லா உயிர்களிலும். பிள்ளை பேறுக்காக தாய் வீடு தேடி, என் வீட்டு தோட்டம் வந்த ஓணான்!!!
சனி, ஜூலை 30, 2011
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
புதன், ஜூலை 27, 2011
மகளிர் கல்லூரி...
மகளிர் கல்லூரியின் எதிரிலிருக்கும்
கோவிலில் இருந்து கொண்டு,
கோவிலில் இருந்து கொண்டு,
கல்லூரிக்கு வரும் பெண்களை
"சைட்" அடிக்கிறார்...
பிள்ளையார்!
(Mr. சிவபெருமான்! சீக்கிரம் அவருக்கு கல்யாணம் செய்யுங்க.)
(Mr. சிவபெருமான்! சீக்கிரம் அவருக்கு கல்யாணம் செய்யுங்க.)
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
7:26:00 AM
லேபிள்கள்:
மனதில் பட்டது...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
செவ்வாய், ஜூலை 19, 2011
பயிரை மேயும் வேலி!
சென்னை தி.நகர் வாணி மகாலில் "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற அமைப்பின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.N.விட்டல், ஆடிட்டர் திரு.குருமூர்த்தி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த திரு.செ.மா.அரசு, மேடைபேச்சாளர் திரு.சுகிசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
திரு. விட்டல் அவர்கள் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டாலே ஒருவர் தேர்தலில் நிற்பது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் அரசியலிலிருந்து களைய முடியும். ஆனால் இதில் நிரபராதியான யாரோ ஒருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப் படும் பொய் வழக்கின் மூலம் பாதிக்கபடலாம் இல்லையா? இதை தவிர்க்க, இத்தகைய வழக்குகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரே ஒரு மேல் முறையீட்டுக்கு அனுமதி உண்டு. அதுவும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆக ஒரு வழக்கு அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டால், பொய் வழக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.
பணி இட மாற்றமும், தற்காலிக பணி நீக்கமும் ஆகிய இந்த இரண்டும் தான் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஆயுதம். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை தான் பணியிட மாற்றம் என்பது விதியாக்கப்பட வேண்டும். மேலும் அதிகாரிகளின் மேல் ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் உடனே தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டால் (முக்கியமான சில உயர் பணிகளின் அதிகாரிகள் [அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவு இருப்பார்கள்.] குறித்த விசாரணைகளுக்கு.) அந்த குற்றத்தின் உண்மை தன்மை குறித்து இரண்டே நாளில் ஆணையம் தகவல் அளிக்கும். இதன் மூலம் தேவையில்லாத தண்டனைகள் குறையும். அதிகாரிகள் மீதான அரசியல்வாதிகளின் ஆதிக்கம் குறையும். அதனால் நேர்மையான ஊழியர்கள் அச்சமில்லாமல் தங்கள் பணியை செய்ய முடியும். என பல உபயோகமான தகவல்களை கூறினார்.
திரு.குருமூர்த்தி அவர்கள் கருப்பு பணம் எப்படி கடல் கடக்கிறது, அது ஏன் பொருளாதாரத்தில் ஒரு இன்றியமையாத விஷயமாகியது, அதை எப்படி ஒழிக்கலாம் என தெளிவாக பேசினார்.
அரங்கம் நிரம்பி நின்று கொண்டு பலர் கலந்து கொண்டது நேர்மையான சமூகம் சாத்தியம் என்ற நம்பிக்கை கொள்ள செய்தது. ஆனால் கலந்து கொண்ட பெரும்பாலோர் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
திரு.சுகிசிவம் அவர்கள் மன்றங்களின் (சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்) மாண்பு குறித்து பேசினார். அவர் எவ்வளவோ அற்புதமான விஷயங்கள் சொன்னார். அதில் ஆணி அடித்தர்போல மனதில் நின்றது....
"பட்டுகோட்டையார் ஒரு பாட்டு எழுதினர்.. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது அப்படின்னு. அவர் காலத்தில அப்படி இருந்தது. ஆனா இப்போ, இது ரெண்டையும் ஒரே ஆள் தானே செய்யறான்."
வருத்தப்பட / மாற்றப்பட வேண்டிய விஷயம்.
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
9:57:00 PM
லேபிள்கள்:
மாற்றம் தேடி...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
சனி, ஜூலை 09, 2011
நெல்லையப்பர் கோவில்!!!
உலகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா? மதியா? என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன்.
சமீபத்தில் பணி நிமித்தம் திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. அப்போது நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றேன். எனது அந்த அனுபவம் இந்த இடுகையில்...
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் பல உள்ள அற்புதமான கோவில்.
இதோ, மேலே உள்ள படத்தை பாருங்கள். அர்ஜுனனோடு சண்டையிட்ட சிவனின் சிற்பம். கோவில் உள்ளே நுழையும் போது, கொடி மரத்தை தாண்டியதும் உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றில் இருக்கும் சிற்பம். இந்த சிற்பத்தின் எழில் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதாது.
கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன். அர்ஜுனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாக சிற்பி, சிவனை இப்படி முறுக்கி கொண்டு நிற்க வைத்திருப்பாரோ!?!
நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்த சிற்பம் - தூணோடு சேர்த்து - ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின் படி இந்த சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதை சமாளிக்கும் விதமாக தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது.
நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்கு செங்குத்தாக தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது. (மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்து செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும்.
மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தை சொல்லுகின்றன. காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனை விட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும் படைத்திருக்கிறார் சிற்பி.
இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக காந்திமதி அம்மன். சுமார் 25 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றேன். அப்படி ஒரு வசீகரம். அந்த முகம் காந்தம் போல ஈர்த்தது நிஜம். (மதி வதனம் காந்தமாக ஈர்ப்பதால் தான் காந்திமதியோ?) (இங்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். "நேரமாச்சு கிளம்புங்க" என அங்கிருந்த யாரும் சொல்லவில்லை.)
ஒரு தூணின் இடை பகுதியை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தூண்களாக பகுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும்படி செதுக்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் ஆச்சரியம் தரும் படி, இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்த சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்த பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப் படவில்லையோ என சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை. (ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.)
பக்தியோ, கலை ஆர்வமோ, மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத காவியத்தை கற்களில் வடித்த சிற்பிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
குறிப்பு: ரதியும் அழகானவள் தான். ஆனால் முருகன் சன்னதியில் இருக்கும் ஒரு தூணில் மன்மதனோடு காட்சி தரும் ரதியின் மூக்கை எந்த முண்டகலப்பையோ உடைத்திருக்கிறான். அதனால் அவள் அழகு குறைந்து காணப்படுகிறாள். (காந்திமதியை விட நீ அழகு கம்மி தான் என சிற்பியிடமே ரதி மூக்குடைபட்டிருப்பாளோ?)
கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன். அர்ஜுனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாக சிற்பி, சிவனை இப்படி முறுக்கி கொண்டு நிற்க வைத்திருப்பாரோ!?!
நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்த சிற்பம் - தூணோடு சேர்த்து - ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின் படி இந்த சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதை சமாளிக்கும் விதமாக தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது.
நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்கு செங்குத்தாக தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது. (மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்து செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும்.
மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தை சொல்லுகின்றன. காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனை விட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும் படைத்திருக்கிறார் சிற்பி.
இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக காந்திமதி அம்மன். சுமார் 25 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றேன். அப்படி ஒரு வசீகரம். அந்த முகம் காந்தம் போல ஈர்த்தது நிஜம். (மதி வதனம் காந்தமாக ஈர்ப்பதால் தான் காந்திமதியோ?) (இங்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். "நேரமாச்சு கிளம்புங்க" என அங்கிருந்த யாரும் சொல்லவில்லை.)
ஒரு தூணின் இடை பகுதியை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தூண்களாக பகுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும்படி செதுக்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் ஆச்சரியம் தரும் படி, இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்த சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்த பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப் படவில்லையோ என சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை. (ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.)
பக்தியோ, கலை ஆர்வமோ, மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத காவியத்தை கற்களில் வடித்த சிற்பிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
குறிப்பு: ரதியும் அழகானவள் தான். ஆனால் முருகன் சன்னதியில் இருக்கும் ஒரு தூணில் மன்மதனோடு காட்சி தரும் ரதியின் மூக்கை எந்த முண்டகலப்பையோ உடைத்திருக்கிறான். அதனால் அவள் அழகு குறைந்து காணப்படுகிறாள். (காந்திமதியை விட நீ அழகு கம்மி தான் என சிற்பியிடமே ரதி மூக்குடைபட்டிருப்பாளோ?)
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
7:50:00 AM
லேபிள்கள்:
பயணம்...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
வெள்ளி, ஜூலை 08, 2011
அடி உதவுவது போல...
இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!
வாங்கிக்கொள்....
வாங்கிக்கொள்....
வள்ளுவனிடம்.
- அறிவுமதி
http://arivumathi.wordpress.com/ கடைசி மழைத்துளி..
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
7:53:00 AM
லேபிள்கள்:
ரசித்து படித்தது...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
ஞாயிறு, ஜூலை 03, 2011
புதிய தலைமுறை...
நமது புதிய தலைமுறை பத்திரிக்கையின், கடந்த 23.06.2011 இதழின், நடுப் பக்கத்தில்
சோதிடம் பாருங்கள்.
எதிர்காலம் அறிய அல்ல...
கிளியின் சிறிதுநேர விடுதலைக்காக.
என ஒரு சுவரொட்டி இருந்தது. இந்த கருத்தோடு நான் முரண்பட்டதால், அதை மறுத்து புதிய தலைமுறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். எனது கருத்தையும் மதித்து இந்த இதழில் அதை வெளியிட்டிருக்கும் புதிய தலைமுறை இதழுக்கும், ஆசிரியருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
(புகைப்படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
11:35:00 AM
லேபிள்கள்:
மனதில் பட்டது...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)