வியாழன், செப்டம்பர் 29, 2011

நட்பு...



விதை

இலக்கியம்

நிலவு

 மலைக்காடு

பயணம்

மனிதர்கள்

உணவு

பாடல்

திரைப்படம்

புகைப்படம்

புத்தகம்

நாம்

வாழ்வே பேரானந்தம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, செப்டம்பர் 24, 2011

கவசமா? தெவசமா?

மோசமான சாலை விபத்தால் மூளையில் நான்கு இடங்களில் இரத்தக்கட்டு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நண்பர் HDFC பாலா விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்...


                      மந்திரி: மன்னா! நீங்க போருக்கு போகும் போது 
                                    மறக்காம கவசம் போடுறீங்களே ஏன்? 

                      மன்னர்: கவசம் போடலன்னா எனக்கு தெவசம் 
                                     பண்ணிடுவாங்களே!

(தலை கவசம்... உயிர் கவசம்... ஹெல்மெட் அணியுங்கள்.)

(நண்பர் ஆ.பாலச்சந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தி)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், செப்டம்பர் 22, 2011

தமிழில் புகைப்படக் கலை



தமிழில் புகைப்படக் கலை நடத்திய தற்செயலான எழுத்துக்களுக்கான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மின்படம். 

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்த வழி தவறி வந்த ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்க சென்ற போது எடுத்தது.ஆந்தையை காப்பாற்றியதற்கும், நல்ல படம் எடுக்க நல்ல சூழலை ஏற்படுத்தி தந்ததற்கும்  நண்பர் சந்தோஷிற்கு நன்றிகள். மேலும் அற்புதமான ஒரு கேமரா வாங்கி என்னை ஊக்கப்படுத்தும் நண்பர் வெங்கடேசனுக்கும் எனது நன்றிகள்.

மேலதிக விவரங்களுக்கு,
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காக்கும் இயற்கையை காப்போம்



ம்மா!

நமக்கு உணவளித்து
உறங்க இடம் தருபவள்.
நாம் அனுபவிக்கும் 
அத்தனை நலன்களுக்கும் 
அடிப்படை அவள்.

அவளுக்கு உடல் சுகவீனம் 
வரும்படி செய்தது அறிவீனம்.
அவளுக்கு உடல் தகிக்கிறது.
எனக்கு மனம் தவிக்கிறது.

வாகன பயன்பாட்டை 
வாய்ப்புள்ள போதெல்லாம் தவிர்த்தல்,
குளிரூட்டி, குளிர் பதனப் பெட்டி
பயன்படுத்தாமல் பொறுத்தல்,
மின் சாதன பயன்பாட்டை
முடிந்த வரை குறைத்தல்,
டீ கப், கேரி பேக்
பயன்பாட்டை வெறுத்தல்,
காய், கனிக்காகவாவது 
மரங்களை வளர்த்தல்
போன்றவை அவள்
சூட்டை தணிக்கும். நம்மை 
சுகப்பட வைக்கும்.

நன்றிகடனாக இல்லை என்றாலும்
எதிர்கால சந்ததியின் 
எதிர்காலம் கருதி 
காக்கும் இயற்கையை காப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, செப்டம்பர் 10, 2011

வாழ்தல்?



றந்த பின் சவப்பெட்டி.
இருக்கும் வரை
தொலைகாட்சிப்பெட்டி.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், செப்டம்பர் 05, 2011

ஆசிரியர்களே... பெருமை கொள்ளுங்கள்!




லன் ஆக்டேவியன் ஹ்யும் என்ற  ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் நலனுக்காகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் திலகரின் வருகைக்கு பிறகு தான் முகம் மாற ஆரம்பித்தது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரசை போராட செய்தார். அவரது தலைமையில் காங்கிரஸ் செயல் பட்டு கொண்டிருந்த காலம். இதோ சுதந்திரம் கிடைக்கப் போகிறது என நாடே நம்பி கொண்டிருந்தது. அப்படி சுதந்திரம் கிடைத்தால், திலகர் தான் பிரதமர் என நாடெங்கும் பேச்சிருந்தது. இது குறித்து திலகரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு திலகர் சொன்ன பதில்... "பிரதமரா? நானா? ஒருக்காலும் இல்லை. நான் ஆசிரியன். என்னால் நூறு பிரதமர்களை உருவாக்க முடியும். இந்தியா சுதந்திரம் பெற்றதும் நான் எனது ஆசிரியப் பணிக்கு திரும்புவேன்."

பெருமை கொள்ளுங்கள் ஆசிரியர்களே... எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான பணியை செய்து கொண்டிருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.

தனி வகுப்பு எடுக்காமல், ஒழுக்கத்தில் மாணவர்களுக்கு உதாரணமாக விளங்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...